Tuesday, February 22, 2011

காலம்...
உன்னிலும் என்னிலும் 
கரைந்துகொண்டிருக்கிறது...

நமக்கான காலம்..
விரயமாகிகொண்டிருக்கிறது....
மறப்பதற்க்காகவே
                        நினைக்கப்படுபவை...
மறப்பதில்லை
                       நம் மனதை விட்டு...
உன் எல்லைகளைத் தாண்டி
உள்ளே வா...
உனக்கான கூண்டல்ல நான்..
உனக்கேவான வானத்தின் கதவு...
கவிதை நீ...
தன்
வெள்ளை மனதில்
எனை 
பதிக்க மறுக்கும் 
ஆர்ப்பாட்டக் கவிதை...

உனதிந்த பிரிவு...
இன்னொரு தாயின் 
இழப்பின் சமன் எனக்கு.

உன் மடிதந்து அழ வை..
.
இந்த ஜென்மத்தின் வலி 
என் கன்னத்தின் வழி
சன்னத்தில் கரையட்டும்...
காத்திருத்தல் 
தவம்....
அது காதலின் 
வரம்....


Monday, February 7, 2011

உனக்காக எதையும் நான் 
சேர்த்து வைக்கப்போவதில்லை...

உன்னில் ஆச்சர்யப்படவே 
எனக்கு
என் ஆயுள் போதாது..